கொழும்பில் நிதியமைச்சரை அவசரமாக தனியாக சந்தித்து பேசிய பங்காளி கட்சிகள்

(Colombo) அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள் தனித்தனியாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தினேஷ் குணவர்த்தன தலைமையின் மக்கள் ஐக்கிய முன்னணி, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகியவை இவ்வாறு சந்திப்பில் ஈடுபட்டுள்ளன.

இந்த சந்திப்புகள் தனித்தனியாக நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, வரவு – செலவுத் திட்ட யோசனை குறித்து கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *