ஊரடங்கில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதை நோக்கமாக கொண்டே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய செப்டம்பர் 01ஆம் திகதிக்கு முன்னர் அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply