பேருந்து முதலான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்

நாளை முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும் அத்தியாவசிய சேவைகளுக்கு பயணிப்பவர்களுக்காக நிறுவனங்களின் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்தால் மாத்திரம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply