ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு கோமாளி நடிகர் என்ற நீதியில் செயலாற்றி வருவதாக செங்கலடி பிரதேச சபை தவிசாளர் எஸ்.சர்வானந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் பேசுகின்ற விடயத்தை பார்க்கின்றபோது அவ்வாறே தோன்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காணொளி மூலம் இந்த கருத்தினை அவர் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் திண்மக் கழிவுகளை அகற்றுகின்ற பணியாளர்கள் தற்போது பாரிய நெருக்கடியினை எதிர்கொள்வதாகவும் எனவே அவர்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கவேண்டும் என்றும் எஸ்.சர்வானந்தன் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் 800ற்கும் மேற்பட்ட குப்பைகளை அகற்றுகின்ற தொழிலாளிகள் உள்ளதாகவும் அனைவருக்கும் நிரந்தர நியமனங்னங்கள் வழங்கப்படவேண்டும் என்றும் எஸ்.சர்வானந்தன் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக 20 வருடங்களுக்கு மேலாக நிரந்த நியமனங்கள் வழங்கப்படாது தொண்டர் அடிப்படையில் திண்மக்கழிவு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் எஸ்.சர்வானந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில பிரதேச சபைகளில் 10 நாட்கள் மட்டுமே அவர்களுக்கான வேலை வழங்கப்படுவதாகவும் ஏறாவூர்பற்று பிரதேச சபையிலும் அவ்வாறு நிரந்தரமற்ற 18 தொழிலாளிகள் பணிபுரிவதாகவும் அவர்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.சர்வானந்தன் கவலை வெளியிட்டுள்ளார்.