<!–
யாழ்ப்பாணம்- தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று, உள்வீதியில் முருகப்பெருமான் சிறிய தேரில் வலம் வந்து மக்களுக்கு அளுள்பாலித்தார்.
சுகாதார அமைச்சினால் ஆலயங்களுக்கு என வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களோடு சிறப்பாக தேர் உற்சவம் இடம்பெற்றிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


