
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடரில் விளையாடுவதற்கு இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை ஐ.பி.எல். கிண்ணத்தை ஏந்தாத றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இவர்கள் இருவரும் விளையாட உள்ளதனை பெங்களூர் அணி நிர்வாகம் உறுதிசெய்துள்ளது.
இதில் வனிந்து ஹசரங்க, அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் செம்பாவுக்கு மாற்றீடாக விளையாடவுள்ளார்.
சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க சமீபகாலமாக பந்து வீச்சில் சிறப்பாக விளையாடி ரி-20 தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அதேபோல முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் சமிந்த வாஸின் பயிற்சியின் கீழ் வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்த சமீர சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
இந்தநிலையில் விராட் கோஹ்லி தலைமையிலான றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

