சிறு போகத்திற்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை! SamugamMedia

எதிர்வரும் சிறு போகத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் இன்றி குறித்த நேரத்தில் தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்கான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் 2023ஆம் ஆண்டுக்காக விவசாயத்துறை மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

சிறு போகத்திற்கு மட்டுமன்றி கடந்த பெரும்போகத்தில் பயிரிட்ட விவசாயிகளுக்கும் இவற்றை விநியோகிக்க உள்ளதாகவும், இதனை சேகரித்து வைத்து அடுத்த போகத்திற்கேனும் பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இம்முறை விவசாயிகளுக்கு ஒரு சலுகையாக 10,000 ரூபாவிற்கு யூரியா உரத்தினை குறித்த நேரத்தில் வழங்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் கடந்த முறை 19,500 ரூபாவிற்கு வழங்கப்பட்ட பண்டி உரத்தை இம்முறை 10,000 ரூபாவிற்கு வழங்க உத்தேசித்துள்ளதாகவும் அதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *