நாடுபூராகவும் ஊரடங்கு அமுல் படுத்தப் பட்டுள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களோடு சந்நிதியான் தேர் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர் உற்சவம் இன்று காலை 9 மணியளவில் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியில் முருகப்பெருமான் சிறிய தேரில் வலம் வந்தார்.






