காலி முகத்திடல் பசுமைக் கடற்கரைப் பகுதியில் முதன்முறையாக ஆமைகள் 2000க்கும் அதிகமான முட்டைகளை இட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதியைப் பயன்படுத்தி முட்டையிடும் ஆமைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகத் திணைக்களம் தனது ஆய்வுகளின் மூலம் தெரிவித்துள்ளது.
ஆமைகள் இலங்கையின் கடற்கரைகளை ஆண்டுதோறும் முட்டையிட பயன்படுத்துகின்றன, ஆனால் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கூற்றுப்படி, மேற்கு கடற்கரையை பயன்படுத்தி ஆமைகளின் அதிகரிப்பு உள்ளது.
இதேவேளை, ஆமை முட்டைகளை வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் ஆரம்பித்துள்ளன.
அதேவேளை, கொழும்பு – காலிமுகத்திடல் பகுதிக்கு இன்று காலை முதல் மக்கள் படையெடுத்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.
அப்பகுதியில் ஆமை முட்டைகளில் இருந்து வெளிவந்த குஞ்சுகளை பார்வையிடுவதற்காகவே இவ்வாறு பெருந்திரளானோர் அங்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.