அரச ஊழியர்களின் சம்பளத்தை பாதியாக குறைக்க நடவடிக்கையா?

அரச ஊழியர்களின் சம்பளத்தை பாதியாக குறைப்பதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் டாக்டர் பந்துல குணவர்தன குறிப்பிடுகிறார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் மாத ஊதியத்தில் பாதியை அரசுக்கு நன்கொடையாக வழங்கினால் மட்டுமே 14 நாட்களுக்கு நாடு மூடப்பட வேண்டும்
என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி சமீபத்தில் கூறினார்.

இதற்கிடையில், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார், அவர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75 சதவிகிதத்தை நாடு மூடப்பட்ட காலத்தில் கோவிட் ஒடுக்க நிதியிலிருந்து கழிக்குமாறு கோரியிருந்தார்.

அந்தக் கடிதத்தில், சுகாதார மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களைத் தவிர மற்ற அனைவரிடமிருந்தும் சம்பளத்தை குறைக்குமாறு அமைச்சர் மேலும் பரிந்துரைத்திருந்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் அமைச்சர் டாக்டர் பந்துல குணவர்தனவிடம் இதுபற்றி கேட்க்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் இது போன்ற எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

Leave a Reply