மருந்து இல்லை எனக் கூறினால் முறைப்பாடு அளியுங்கள் – இலங்கை வைத்திய சங்கம் வலியுறுத்தல்! SamugamMedia

அரச வைத்தியசாலைகள் அல்லது அரச மருந்தகங்களில் செல்லும் நோயாளர்களுக்கு அங்கு மருந்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டால் , அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு இலங்கை வைத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

இலங்கை வைத்திய சங்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெப்ரவரி 15ஆம் திகதி நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. 

இது தொடர்பில் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவிக்கையில், எந்தவொரு நோயாளியும் அரச வைத்தியசாலைகள் அல்லது மருந்தகங்களுக்கு சென்று அங்கு மருந்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டால் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

இது தொடர்பில் சட்ட உத்துழைப்பினை வழங்குவதற்கும் நீதிமன்றத்தை நாடுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *