வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாளை முதல் 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகங்களின் ஊடாக கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக மாவட்ட ரீதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை விரைவாகத் தயாரிக்குமாறு நிதியமைச்சின் செயலாளர், மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *