வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஶ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் இன்று மாசி மக உற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது ஆலயவரலாற்றுடன் தொடர்புடைய கருடப்பறவை மாசிமக தீர்த்தத்தின் போது அம்மன் தீர்த்தமாட சென்ற வேளை வானில் வட்டமிட்டு அம்மனை தரிசித்துச் சென்ற அதிசய காட்சி இடம்பெற்றது.

இந்நிலையில் வானில் வட்டமிட்ட கருடன் அம்மனை தரிசித்துசென்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






