நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் தொழிற்சங்க கூட்டமைப்பு: நாளை தீர்க்கமான கூட்டம் SamugamMedia

நாளைய தினம் நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் அரச, அரை அரச மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தலைமையில் நாளை நடைபெற உள்ளது.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்படும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்தப் பணிப்புறக்கணிப்புடன், நாளை மறுதினம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அகில இலங்கை சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த குருகே இதனை விளக்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *