வைரலாகும் மைத்திரிபால சிறிசேனவின் டிக்டாக்! SamugamMedia

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டிக்டாக்கில் பதிவிட்டுள்ள “எல்லோரும் எனக்கு எதிரியாக இருக்க விரும்புகிறார்கள்” என்ற வாசகத்துடன் அமைந்த பாடலுடன் அவரது படங்களை காட்டும் பதிவொன்று பகிரப்பட்டு வருகின்றது.

இந்த டிக்டாக் இடுகையில், ஆர்கேன் லீக் ஒஃப் லெஜெண்ட்ஸ் தொடரிலிருந்து இமேஜின் டிராகன்ஸ் என்ட் ஜேஐடி என்ற பாடல் சேர்க்கப்பட்டுள்ளது.

பாடலின் வார்த்தைகள் “எல்லோரும் என் எதிரியாக இருக்க விரும்புகின்றார்கள் அனுதாபத்தை விட்டுவிடுங்கள், எல்லோரும் என் எதிரியாக இருக்க விரும்புகின்றார்கள்” என்று கூறுவதாக அமைந்துள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக சிறிசேன தற்போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

பயங்கரவாத தாக்குதல்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கைகளை புறக்கணித்ததாக குற்றம்சாட்டி முன்னாள் ஜனாதிபதியை சிறையில் அடைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலைலேயே அவரின் டிக்டாக் பதிவு வெளியாகியுள்ளது.

Leave a Reply