முல்லைத்தீவில் மாமனிதர் கிட்டிணன் சிவநேசனின் நினைவு நிகழ்வு! SamugamMedia

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சிவநேசன் கிட்டிணன் அவர்களது 15 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முல்லைத்தீவு மல்லாவி அனிச்சயங்குளம் பகுதியில் இன்று (06)இடம்பெற்றது.

உயிர் நீத்த நாடாளுமன்ற உறுப்பினர் புதைக்கப்பட்ட மல்லாவி அனிஞ்சியன்குளம் பகுதியில் அவரது சமாதியில் இந்த நிகழ்வு நினைவுகூரப்பட்டது.  

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திலகநாதன் கிந்துயன்  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  மல்லாவி பகுதியை சேர்ந்த பொதுமக்கள்  பலரும் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *