இலங்கையில் தொலைபேசி வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கை! சட்டத்தரணி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் SamugamMedia

நாட்டில் பாரிய அளவிலான கையடக்கத் தொலைபேசி கடத்தல் இடம்பெறுவதாக சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.

இணைய சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கையடக்கத் தொலைபேசிகளை நாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் பில்லியன் கணக்கான டொலர்கள் மோசடி செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் பழுதடைந்துள்ள பயன்படுத்திய தொலைபேசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு திருத்தப்பட்டு புதிய தொலைபேசிகளாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *