கொழும்பில் சற்றுமுன் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள்! SamugamMedia

கொழும்பில் சற்றுமுன் பல்கலைக்கழக மாணவர்கள் பெருந்திரளானோர் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். 

கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்றைய தினம் கண்ணீர்ப்புகைக்குண்டுகள் வீசப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பல்கலைக்கழக மாணவர்களுடன், பேராசிரியர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் காரணமாக துன்முல்லை சந்தி மற்றும் Reid அவென்யூ பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

கொழும்பில் நேற்றைய தினம் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *