யாழ் மாநகர முதல்வர் தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்று(10) காலை உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் தலைமையில் ஆரம்பமானது.
எனினும் சபை ஆரம்பமாகிய போது சபையில் கோரம் இல்லாததால் சபையினை அரைமணிநேரம் ஒத்தி வைப்பதாக ஆணையாளர் அறிவித்தார்.
எனினும் தொடர்ந்தும் கோரமின்மை காரணமாக பிறிதொரு நாள் முதல்வர் தெரிவு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.