இலங்கையில் திடீரென அதிகரித்துவரும் முக்கிய நோய்த் தாக்கம்!SamugamMedia

நாட்டில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சிறுநீரக வைத்திய நிபுணர் வைத்தியர் அநுர ஹேவகீகன கருத்து தெரிவிக்கையில்,

அண்மைக்கால போக்கு கவலைக்குரியதாக தெரிவித்திருந்தார்.விவசாய நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபட்டுள்ள பிரதேசங்களில் இருந்து பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டார்.

உரங்களின் பயன்பாடு மற்றும் பல காரணிகள் இதற்கு காரணம்.இதேவேளை, சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவின் வரம்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் அவதானித்து வருகின்றது.

இது தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியும் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *