
கடந்த வருடம் காலிமுகத்திடலில் ஆரம்பமாகிய இளைய தலைமுறையின் போராட்டம் இடம்பெற்றிருக்காவிட்டால் ராஜபக்சாக்களே இன்னும் இந்த நாட்டை ஆண்டுகொண்டிருப்பர். மகிந்தவையும் கோத்தாபயவையும் விரட்டியடித்து ஏனைய ராஜபக்ச குடும்பத்தினரையும் பதவி துறக்கச் செய்து ரணில் விக்கிரமசிங்ஹவையும் தினேஷ் குணவர்த்தனவையும் முறையே ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகிக்கச்செய்தமைக்கு அந்த இளைய தலைமுறையினரின் போராட்டமே காரணம் என்பதை யார்தான் மறுப்பர்?