வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி பிணையில் விடுதலை! SamugamMedia

சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தினை பெற்றார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா ஏ9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி தாய்மாரால் சுழற்சி முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் குறித்த போராட்டம் அப் பகுதியில் கொட்டகை அமைத்து நடைபெற்று வருகின்றது.

குறித்த கொட்டகை அமைந்துள்ள வீதி மின் கம்பத்தில் பொருந்தப்பட்டிருந்த மின் விளக்கு இணைப்பு மூலம் மின்சாரம் பெறப்பட்டு போராட்ட கொட்டகைக்கு வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கொழும்பில் இருந்து வந்த மின்சார சபையினர் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாக தெரிவித்து குறித்த போராட்ட கொட்டகையில் இருந்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவுக்கு எதிராக பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து அவர் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டவர் வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கினை மே மாதத்திற்கு ஒத்தி வைத்திருந்ததுடன் மின்சாரத்தை துண்டித்த அதிகாரிகளையும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *