இந்திய மீனவர்கள் 16 பேர் யாழில் இலங்கை கடற்படையினரால் கைது! SamugamMedia

யாழ்ப்பாணம் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம், புதுக்கோட்டை மற்றும் நாகை பட்னத்தைச் சேர்ந்த இரு படகுகளில் எல்லை தாண்டி மீன் பிடித்த மீனவர்களே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் காரைநகர் கடற்பரப்பில் நான்கு மீனவர்ளும், பருத்தித் துறை கடற்பரப்பில் 12 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வளத்துறை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

12 மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றிலும், 4 மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply