மேலும் குறைகிறது விலை! – இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு SamugamMedia

இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுக்கிளன் விலை மேலும் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

டொலருக்கு நிரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக இவ்வாறு விமான டிக்கெட்டுக்களின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Economy Class வகுப்புக்கான கட்டணத்தில் குறைந்தது ஐந்து சதவீதம் வரை குறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி, கொழும்பு – லண்டன் மற்றும் கொழும்பு – மெல்போர்ன் போன்ற அதிக தேவையுள்ள துறைகளுக்கு குறைந்த விலையில் டிக்கெட்டுக்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை,  ரூபாவின் பெறுமதி மேலும் உயரும் பட்சத்தில்  விமான டிக்கெட்டுக்களின் விலை மேலும் குறையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *