கல்முனை பிரதேச ஆசிரியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!SamugamMedia

தொழிற்சங்க நடவடிக்கையின் போது  கல்முனை பிரதேச ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (05) கல்முனை தனியார் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கள் இன்று (15) புதன்கிழமை முன்னெடுத்துள்ள  தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக கல்முனை கல்வி வலயப் பாடசாலைகள் மாணவர்கள், ஆசிரியர்கள் வரவின்மையால் வெறிச்சோடிக் காணப்பட்டது. 
அத்துடன் ஆசிரியர்கள் மாணவர்கள் வரவின்மையால், மூன்றாம் தவணைப் பரீட்சையும் இன்று (15) புதன்கிழமை நடைபெறாமல் பிரிதொரு தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply