கே.ஜி.எப் திரைப்படம் : இரண்டாம் பாகத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

கே.ஜி.எப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன், சஞ்சய்தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ரவிபஸ்ரூர் என்பவர் இசையமைத்துள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.

சுமார் 120 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் முதல் பாகத்தைப்போலவே இரண்டாம் பகமும் மிகப் பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply