அரச பேரூந்துகளிலும் இனி இணையத்தளம் ஊடாக ஆசன முன்பதிவு செய்யலாம்! வெளியான அறிவிப்பு SamugamMedia

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் நீண்ட தூர பயணங்களுக்காக இணையத்தளம் வாயிலாக ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.

அத்துடன், sltb.express.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் வாயிலாக நெடுந்தூர பயணங்களுக்கான ஆசன முன்பதிவினை மேற்கொள்ள முடியும்.

1315 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் வாயிலாகவும் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *