இலங்கையில் கொரோனா தொற்று பாதிப்பால் நேற்றையதினம் மேலும் 194 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, உயிரிழந்தவர்களில் 91 ஆண்களும் 103 பெண்களுமே உயிரிழந்துள்ளனர்.
எனினும், அவ்வாறு உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 145 பேர் உயிரிழந்துள்ளதோடு, 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 49 பேர் மரணித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7,560 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன்,3 ஆயிரத்து 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன்படி, மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 393,223 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





