ஜந்து இலட்சத்தை எடுத்துக்கொண்டு அவரை விடு – தொலைபேசியூடாக பொலிஸாரிடம் பேரம்! SamugamMedia

காலி முகத்துவாரப் பகுதியில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று இரவு ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சிறிய ரக வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சாரதியின் இருக்கைக்கு அருகில் ஒரு பையில் 49,500 ரூபா பணமும், சாரதி இருக்கைக்கு அடியில் 3 கிராம் 340 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடித்திருந்ததுடன் சாரதியையும் கைது செய்திருந்தனர்.

இதன்போது, சந்தேக நபரின் தொலைபேசி ஊடாக பொலிஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், 5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு சாரதியை விடுவிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய மீன் வியாபாரி என்றும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *