தொதல் பொதியில் இருந்த எலி..! சிவனொளிபாதமலையில் பரபரப்பு..!SamugamMedia

நல்லதண்ணி நகரில் உள்ள இனிப்பு பண்டங்கள் விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று முன்தினம் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த வேலையில் தரிசனம் முடித்து விட்டு திரும்பி செல்லும் வேளையில் தொதல் பொதி ஒன்று விற்பனை நிலையத்தில் பெற்று சென்று உள்ளனர்.

அந்த பொதியை நேற்று உண்ணுவதற்கு எடுத்து வெட்டிய போது அந்த தொதல் பொதியில் இறந்த நிலையில் எலி இருப்பதை அவதானித்து உள்ளனர்.
லட்ச கணக்கான மக்கள் கூடும் சிவனடி பாதமலை பருவ காலங்களில் இவ்வாறு தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *