பூனாகலை கபரகலை தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செந்தில் தொண்டமான் விஜயம்!SamugamMedia

பண்டாரவளை பூனாகலை – கபரகலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் நாளை நேரடி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகம்  மாற்று இடங்களையும், பாதுகாப்பு வசதிகளையும் செய்துகொடுக்காவிடின் மக்களுடன் கலந்துரையாடி பலவந்தமான தீர்மானங்களை நிர்வாகத்துக்கு எதிராக எடுக்க வேண்டிய நிலை உருவாகுமென செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனிசமான தொகை நட்ட ஈடு பெற்றுத்தரப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply