ஊரடங்கால் தினமும் 15 பில்லியன் நட்டம்

ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் அரசாங்கத்திற்கு தினமும் சுமார் 15 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

எனவே நாடு முடக்கப்படுவதை தொடர்ந்தும் நீடிக்காது, முடிந்தவரை குறுகிய காலத்தில் திறக்க வேண்டும்.

இது போன்ற சூழ்நிலை ஏற்படும்போது, நாட்டின் வளர்ச்சி வீதம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பன பாதிக்கப்படும்.

எனவே, நாட்டை முடக்குவதால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க வேண்டுமாயின், நாம் நாட்டை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *