நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு!

நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை)  திறக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், மத்திய நிலையங்கள் அனைத்தும் நாளையும் திறக்கப்படுமென விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொருளாதார மத்திய நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பொருளாதார வர்த்தக நிலையங்கள் மீள திறக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *