
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் ஒரு நாள் போட்டி தொடர் நடத்த முடிவானது.
இதன்படி, வருகிற செப்டம்பர் 1 ஆம் திகதி தொடங்கி 8 ஆம் திகதி வரை போட்டிகள் நடத்துவது என திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி அஷ்ரப் கனியிடம் இருந்து ஆட்சி அதிகாரம் தலீபான்கள் வசம் சென்றுள்ளது.
எனவே, விமான போக்குவரத்து பாதிப்புகள், வீரர்களின் மனநலம் ஆகியவற்றை காரணம் காட்டி இந்த போட்டி தொடர் வரும் 2022ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதனை இரு நாட்டு அணிகளின் வாரியமும் ஒப்புதல் அளித்து, முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது கொழும்பு தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.




