
இலங்கையில் புனித ரமழான் மாதம் நாளை முதல் ஆரம்பமாவதாக நேற்று மாலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாம் எல்லோரும் நாளை முதல் நோன்பு நோற்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். இந்த சந்தர்ப்பத்தில் நம்மோடு இணைந்து வாழ்கின்ற ஏழை எளிய மக்கள் குறித்தும் ஒரு கணம் சிந்திக்க வேண்டியது நமது கடப்பாடாகும்.

