இலங்கையில் மேலும் 3 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 397 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றையதினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 386 பேர் குணமடைந்துள்ளனர்.
அதன்படி, 346 ஆயிரத்து 767 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
எனினும், 43 ஆயிரத்து 597 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை, மேலும் 194 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதோடு, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7,560 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது





