நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் துசித {ஹலங்கமுவ தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாதாந்த சிகிச்சைகள் ஊடாக மருந்துகளை பெற்றுக் கொள்வோருக்கான சேவை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு கிடைத்துள்ள பொதிகள் ஓரிரு நாட்களில் உரியவர்களுக்கு கிடைக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.
குறைந்தபட்ச ஆளணியுடன் குறைந்த நாட்களுக்குள் மருந்து விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.
எனினும் சாதாரண தபால் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றார்.





