கால்வாயில், பெண் சிசுவின் சடலம் மீட்பு ! SamugamMedia

பொகவந்தலாவை, லொய்னோன் கெசல்சமுவ ஓயாவில் இருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்று நேற்று புதன்கிழமை (22) மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

மரக்கறித் தோட்டத்தில்வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் சிசுவின் சடலம் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.

குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்ட தடயவியல் பொலிஸார் ஹட்டன் நீதிமன்ற நீதவானின் பணிப்புரைக்கு அமைய கெசல் கமுவ ஒயாவில் இருந்து சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இவ்வாறு மீட்கப்பட்ட சிசு ஏழு மாதங்களில் பிறந்த குழந்தையென ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

மீட்கப்பட்ட சிசுவின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *