இன்றும் அதிகளவான ஆண்கள் கொரோனாவுக்கு பலி

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 190 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை அரசாங்க தகவல் திணைக்களம் உறுதி செய்துள்ளது.

அவ்வாறு, உயிரிழந்தவர்களில் 113 ஆண்களும் 77 பெண்களும் உள்ளடங்குவதோடு, 60 வயதுக்கு மேற்பட்ட 150 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 38 பேரும், 30 வயதுக்குட்பட்டோரில் 2 பேரும் மரணித்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7 ஆயிரத்து 750 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 397 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 346 ஆயிரத்து 767 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 43,597 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *