யாழில் 36 ஆயிரம் குடும்பங்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவு – அரச அதிபர்

யாழில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கொரோனா இடர் கால உதவித் தொகையான 2,000 ரூபா வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கொரோனா இடர்கால கொடுப்பனவு வழங்குதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் இன்றைய தினம் (24) 3 ஆயிரம் குடும்பங்களுக்கு, இடர்கால கொடுப்பனவான 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு, வேலணை, யாழ்ப்பாணம், மருதங்கேணி, பருத்தித்துறை, ஆகிய பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 36 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு கொரோனா இடர் கால உதவித் தொகை வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

குறித்த உதவித் தொகையானது தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *