யாழில் இன்று (24) மாத்திரம் 9 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரும், கொடிகாமத்தைச் சேர்ந்த இருவரும், குருநகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இறந்த ஒருவருக்கும் என 9 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த 9 பேரில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.





