உருத்திர சேனையின் “திருவள்ளுவர் திருவுருவ வெளியீட்டு விழா”! SamugamMedia

உருத்திர சேனையின் “திருவள்ளுவர் திருவுருவ வெளியீட்டு விழா” நிகழ்வு யாழ் இந்து கல்லூரியில்  ( சபாலிங்கம் அரங்கம்)   26.03.2023 இன்று   மாலை 3.00 மணி அளவில் நடைபெற்றது,

.

இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் ( தலைவர் – சிவசேனை ), சிறப்பு விருந்தினர்கள் H.E. ராகேஷ் நடராஜ் ( இந்திய துணை தூதுவர் – யாழ்ப்பாணம் ) ந.விஜயசுந்தரம் ( தலைமை ஆசிரியர் – வலம்புரி ) ,  கௌரவ விருந்தினர்கள் கலாநிதி ஆறு திருமுருகன் ( தலைவர் – துர்க்காதேவி தேவஸ்தானம் , தெல்லிப்பளை ) பேராசிரியர் எஸ்.ஸ்ரீ சற்குணராஜா ( துணைவேந்தர் -யாழ் பல்கலைக்கழகம்)  ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

சைவ சமய தலைவர்கள், தமிழ் பற்றாளர்கள், இந்து உணர்வாளர்கள், ஆன்றோர், சான்றோர், அறநெறி பாடசாலை பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள், தமிழ் அரசியல் தலைவர்கள், இந்து கலாச்சார உத்தியோகத்தர்கள், உருத்திர சேனையின் நலன் விரும்பிகள், மற்றும் அன்பு தமிழர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *