நாடு முடக்கப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை – ருவன் விஜேவர்த்தன

நாடு முடக்கப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை என ஐக்கிய தேசிய கட்சி பிரதி தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த வாரம் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்கம் என்னவென்றால் கொரோனா தொற்று காரணமாக நாட்டை தொடர்ந்து முடக்கவேண்டிய நிலை ஏற்பட்டால் அர்ப்பணிப்பதற்கு மக்கள் தயாராகுமாறு மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்.

மேலும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 200 வரை நெருங்கி இருக்கின்றது. நாட்டை மூன்று வாரங்களுக்காவது முடக்கவேண்டும் என்றே நாங்கள் தொடர்ந்து அரசாங்கத்துக்கு தெரிவித்து வந்தோம். இருந்தாலும் அரசாங்கம் 10 நாட்களுக்கு நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்திருக்கின்றது.

என்றாலும் வீதிக்கு சென்று பார்த்தால் பொது மக்கள் வீதிகளில் இறக்கின்றனர். நாடு முடக்கப்பட்டிருப்பது போல் தெரியவில்லை. இவ்வாறான முடக்கத்தை நாங்கள் கோரவில்லை.சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கும் முறையிலான முடக்கமே தேவையாகின்றது என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *