3000 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 3000 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (24) திருகோணமலை, மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் இடம்பெற்றது

ஜெர்மன் முஸ்லிம் ஹெல்பன் நிறுவனத்தின் அனுசரணையோடு இடம்பெற்ற இந்நிகழ்வினை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் அம்மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டி, கோரல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அதுக் கோரள,கந்தளாய் பிரதேச செயலாளர், முஸ்லிம் ஜெர்மன் ஹல்பன் நிறுவனத்தின் தலைவர் சாதிக் ஹசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *