ஜம்மு- காஷ்மீர்,  லடாகின் அரசியல் தன்மையை மீட்டெடுக்க தீர்மானம்!

ஜம்மு- காஷ்மீர்,  லடாகின்  அரசியல் தன்மையை மீட்டெடுப்பது குறித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குப்கர் கூட்டணி தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குப்கர் கூட்டணியின் செய்தி தொடர்பாளர் எம்,ஒய்.தாரிகாமி மேற்படி கூறியுள்ளார்.

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து மக்களின் சட்டப்பூர்வமான உரிமையாகும். அதை மீட்டெடுக்கத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

இதனைத் தவிர நாங்கள் வேறு எதனையும் கேட்கவில்லை. இது குறித்த கோரிக்கையை வேறு வழியில் கூறியவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக பறிக்கப்பட்ட அந்த அந்தஸ்து மீட்டெடுக்கப்பட வேண்டும். இதுவே எங்கள் அடிப்படை கோரிக்கையாகும்’எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *