ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இடைநிறுத்தம்

இலங்கையில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஓருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவிருந்தது.

ஆப்கானிஸ்தானின் காபுலில் இருந்து பயணிக்கும் விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தொடர் பிற்போடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் டுபாய் ஊடாக இலங்கையை அடையும் போது கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்படும் மன ரீதியான சிக்கல்களை கருத்திற்கொண்டு இரண்டு கிரிக்கெட் சபைகளும் கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன.

இதற்கமைய, குறித்த தொடரினை அடுத்த வருடம் நடத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *