தேர்தலுக்கு தேவையான நிதி எப்போது கிடைக்கும்: ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!samugammedia

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதியை விடுவிப்பது தொடர்பில் நிதி அமைச்சிடம் இருந்து இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சாதகமான பதில் கிடைக்குமென தாம் எதிர்பார்ப்பதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

இதனிடையே, இந்த வாரத்திற்குள் பிரதமருடனான கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஏப்ரல் 04 ஆம் திகதி ஆணைக்குழு கூடி தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தீர்மானிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *