பசுமைப் பொருளாதாரத்தில் முதலாவது நாடாக இலங்கை; ஜனாதிபதியின் புதிய திட்டம்! samugammedia

பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்தில் பிரவேசித்த முதல் நாடு என்ற வகையில், அடுத்த இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கையை இலங்கை அறிமுகப்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தமது நம்பிக்கை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வந்த முதலீட்டாளர்கள் குழுவுடன் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்பு மற்றும் பசுமை ஆற்றலில் கவனம் செலுத்துதல் ஆகிய இரண்டு பிரதான பிரச்சினைகள் இலங்கைக்கு அவசியமா உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *