நாட்டில் எரிபொருள் நிலையங்களில் மீண்டும் வரிசை?samugammedia

நாட்டின் பல இடங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களில் மீண்டும் எரிபொருள் வரிசைகளை அவதானிக்கக்கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் முதலாம் திகதி எரிபொருள் விலை பாரியளவில் குறைவடையும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக பல எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் கொள்வனவுக்கான நடவடிக்கைகளை எடுக்காதிருப்பதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் சரியாக இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை எரிபொருள் விலை குறையும் போது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு நட்டம் ஏற்படுமாக இருந்தால் அதனை சரி செய்வதற்கான பொறிமுறை ஒன்றை அரசாங்கம் அமுலாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *