மரத்தில் கட்டிவைத்து பாலியல் சித்திரவதை செய்யப்பட்ட பாடசாலை மாணவன்

பா கம்பஹா – பல்லேவெல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 7 வயதான பாடசாலை மாணவணை மரத்தில் கட்டிவைத்து பாலியல் சித்திரவதை புரிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 12 வயதான மாணவனை தமது பொறுப்பில் எடுத்துள்ள பொலிஸார் மேலும் சில மாணவர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் ஐந்து மாணவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் பாரிய பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மாணவன் பாடசாலை மைதானத்தில் உள்ள கழிவறைக்கு அருகில் உள்ள மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

The post மரத்தில் கட்டிவைத்து பாலியல் சித்திரவதை செய்யப்பட்ட பாடசாலை மாணவன் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *